Music: Ilaiyaraaja
Year: 1993
Lyrics: Vairamuthu
Singers: S.P.Balasubrahmanyam, S. Janaki
ஆண் : தாஜ்மகால் தேவையில்லை,
அன்னமே, அன்னமே..
பெண் : காடுமலை நதிகளெல்லாம்
காதலின் சின்னமே..
ஆண் : இந்த பந்தம், இன்று வந்ததோ
பெண் : ஏழுஜென்மம், கண்டுவந்ததோ
ஆண் : உலகம் முடிந்தும்,
தொடரும் உறவிதுவோ...
பெண் : தாஜ்மகால் தேவையில்லை,
ஆண் : அன்னமே,அன்னமே..
காடுமலை நதிகளெல்லாம்
பெண் : காதலின் சின்னமே..
ஆண் : பூலோகம் என்பது,
பொடியாகிப் போகலாம்,,
பொன்னாரமே, நம் காதலோ,
பூலோகம் தாண்டி வாழலாம்.
பெண் : ஆகாயம் என்பது,
இல்லாமல் போகலாம்,,
ஆனாலுமே, நம் நேசமே,
ஆகாயம் தாண்டி வாழலாம்..
ஆண் : கண்ணீரில் ஈரமாகிக்
கறையாச்சுக் காதல்
பெண் : கறை மாற்றி நாமும்
மெல்ல, கரையேற வேண்டுமே
ஆண் : நாளை வரும், காலம்
நம்மை, கொண்டாடுமே...
பெண் : தாஜ்மகால் தேவையில்லை,
ஆண் : அன்னமே,அன்னமே..
காடுமலை நதிகளெல்லாம்
பெண் : காதலின் சின்னமே..
பெண் : சில்வண்டு என்பது,
சிலமாதம் வாழ்வது,,
சில்வண்டுகள், காதல் கொண்டால்,
செடி என்ன கேள்வி கேட்குமா
ஆண் : வண்டாடும் காதலைக்
கொண்டாடும் கூட்டமே,,
ஆணும் பெண்ணும், காதல்
கொண்டால், அது ரொம்ப பாவமென்பதா
பெண் : வாழாத காதல்
ஜோடி, இம்மண்ணில் கோடியே
ஆண் : வாழாத பேர்க்கும்
சேர்த்து, வாழ்வோமே தோழியே
பெண் : வானும் மண்ணும், பாடல்
சொல்லும், நம்பேரிலே...
ஆண் : தாஜ்மகால் தேவையில்லை,
அன்னமே, அன்னமே..
பெண் : காடுமலை நதிகளெல்லாம்
காதலின் சின்ன..மே..
ஆண் : இந்த பந்தம், இன்று வந்ததோ
பெண் : ஏழுஜென்மம், கண்டுவந்ததோ
ஆண் : உலகம் முடிந்தும்,
தொடரும் உறவிதுவோ...
பெண் : தாஜ்மகால் தேவையில்லை
ஆண் : அன்னமே,அன்னமே..
காடுமலை நதிகளெல்லாம்
பெண் : காதலின் சின்னமே..
No comments:
Post a Comment