Welcome to My Blogger Site💐
!doctype>Friday, August 30, 2024
Eight shape walking🚶🚶♀️. This activity can improve balance, coordination, and overall physical fitness.
✨மோரின் நன்மை ✨
மோர் என்பது மிகவும் ஆரோக்கியமான ஒரு பானமாகும். தினமும் மோர் குடிப்பது நன்மைகள் பலவுடன் கூடியது:
👉மோர் குடிக்கும் போது சிரிது வெங்காயம் இஞ்சி பச்சைமிளகாயை கருவேப்பிலை உப்பு சேர்த்து குடிக்கும் போது அருமையாக இருக்கும் 🤗
சீரான ஜீரணம் மோர்
👉ஜீரண செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் அஜீரணத்தைக் குறைக்கிறது.
உடல் வெப்பத்தைக் குறைக்கும்
👉மோர், உடலில் உள்ள உஷ்ணத்தை குறைக்க உதவுகிறது, குறிப்பாக கோடைகாலத்தில்.
கலோரிகள் குறைவாக உள்ளன
👉மோரரில் கலோரி குறைவாக இருப்பதால், உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.
மலச்சிக்கலைத் தவிர்க்கும்
👉மோரில் உள்ள ப்ரொபயோடிக்கள் (probiotics) மலச்சிக்கலைக் குறைக்க உதவுகின்றன.
நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை
👉மோர், கீரையுடன் சேர்த்து குடித்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவக்கூடும்.
👉தினசரி மோர் குடிப்பது உங்கள் உடல் நலத்தை மேம்படுத்துவதில் மிகுந்த உதவியாக இருக்கும்.
Thursday, August 29, 2024
தினமும் தவறாமல் சாப்பிட சொல்லும் பேரிச்சம் பழம் காரணம் இதுதான்🤗
வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டசத்துக்கள் நிறைந்தவற்றை சாப்பிட வேண்டும். இவை அனைத்துமே பேரீச்சம் பழத்தில் அதிகம் உள்ளன.
வெயில் காலங்களை விட குளிர், காலங்களில் நம் உடலில் பலவித நோய் தொற்றுகள் உண்டாகும். அந்த வகையில், ஆரோக்கிய உணவுகளை குளிர் காலத்தில் எடுத்து கொண்டால் நோய் கிருமிகள் நம்மை அண்டாமல் தடுக்கலாம். குறிப்பாக வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டசத்துக்கள் நிறைந்தவற்றை சாப்பிட வேண்டும். இவை அனைத்துமே பேரீச்சம் பழத்தில் அதிகம் உள்ளன என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை குளிர் காலங்களில் சாப்பிட்டு வருவதால் எப்படிப்பட்ட நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும் என்பதை பற்றி இனி அறியலாம்
எலும்புகள் வலு பெற : குளிர் காலத்தில் சூரிய ஒளி நம்மீது குறைவாக படுவதால், உடலில் வைட்டமின் டி உற்பத்தி குறைவாக இருக்கும். எலும்புகளுக்கு வலு சேர்க்க வைட்டமின் டி பெரிதும் உதவுகிறது. எனவே பேரீச்சம் பழத்தை எடுத்துக்கொள்வதால் எலும்புகள் உறுதியாகும். மேலும் இப்பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மெக்னீஷியம் நிறைந்துள்ளதால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். இதில் கால்சியம் சத்தும் அதிகம் உள்ளதால் பற்கள் வலுவாக இருக்க உதவும்.
மார்டைப்பு பாதிப்பை குறைக்கும் :
உடலில் வெப்பநிலை குளிர் காலங்களில் குறைவதால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு மற்றும் அதிக இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இதை காலை மற்றும் மாலையில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட்டு வந்தால் குளிர் காலத்தில் ஏற்படும் மந்த தன்மை நீங்கும்.
வெதுவெதுப்பாக இருக்க செய்யும் : உடலுக்கு தேவையான வெப்பத்தை குளிர் காலங்களில் பேரீச்சம் பழம் தர உதவும். எனவே இதை சாப்பிடுவதால் உங்களை எப்போதும் வெதுவெதுப்பாக வைத்து கொள்ளலாம்.
செரிமான பிரச்சனை : குளிர் காலத்தில் உடலின் செயல்பாடுகள் மெதுவாக நடப்பதால் நார்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் செரிமான பிரச்சனை உண்டாகாது. பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் செரிமானத்தை சீராக்குவதோடு, குடல் புற்றுநோய் பாதிப்பையும் குறைக்கிறது.
இனிப்பு பலகாரங்கள் செய்யலாம் : பண்டிகை காலங்களில் நீங்கள் சர்க்கரைக்கு பதில் பேரீச்சம் பழம் சேர்த்து இனிப்பு பலகாரங்களை தயார் செய்யலாம். இதனால் உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். உங்கள் பண்டிகையும் இனிப்புடன் நிறைவைடையும்.
Sunday, August 25, 2024
✨செவ்வாழை பயன்கள் ✨
வாழை பழங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்த பழம் இந்த செவ்வாழை.செவ்வாழை பழம், தமிழில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான பழம். இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என எண்ணற்ற உடலுக்கு தேவையான அணைத்து சத்துக்களும் உள்ளன. மாலை கண் நோய் முதல் மலட்டு தன்மை பிரச்சனை வரை தீர்வு தரக்கூடியது தான் செவ்வாழை.
அதிக சத்துகள்
👉செவ்வாழை தண்ணீர், கார்போஹைட்ரேட்கள், புரதம், மற்றும் பல விதமான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.
மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு
👉செவ்வாழையில் அதிக நார்ச்சத்து இருப்பதால், அது மலச்சிக்கலை சரிசெய்வதிலும், செரிமானத்தை மேம்படுத்துவதிலும் உதவுகிறது.
உடல் எடை குறைப்பு
👉செவ்வாழையில் குறைந்த கலோரி உள்ளதால், அதை உணவில் சேர்ப்பதனால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
உடல் சூட்டை கட்டுப்படுத்தல்
👉செவ்வாழையை சாப்பிடுவது உடல் சூட்டை குறைத்து உடலுக்கு சுறுசுறுப்பு கொடுக்கும்.
சரும ஆரோக்கியம்
👉செவ்வாழை சருமத்திற்கு நல்லது. இதில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட், சருமத்தின் கதிர் ஒளியின் பாதிப்புகளை எதிர்க்கவும், சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
எதிர்ப்பு சக்தி
👉செவ்வாழையில் உள்ள வைட்டமின் B6 மற்றும் சத்துக்கள், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
உடல் எரிச்சல் குறைப்பு
👉செவ்வாழையின் இயற்கை குளிர்ச்சி தன்மை, உடலில் உள்ள எரிச்சலை குறைக்க உதவுகிறது.
மூட்டு மற்றும் எலும்பு ஆரோக்கியம்
👉செவ்வாழையில் உள்ள பொட்டாசியம், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
செவ்வாழையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
Saturday, August 24, 2024
சமையளுக்கு பயன்படும் சின்ன வெங்காயத்தின் பெரும் பயன்கள் ✨
சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயம், தமிழில் பெரும்பாலும் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான உணவுப் பொருள். இது மருத்துவகுணங்கள் நிறைந்தது. சில முக்கியமான பயன்கள்:
பசியை தூண்டுகிறது
👉சின்ன வெங்காயம் பசியை தூண்டுவதில் பெரிதும் உதவுகிறது. அது உடலின் ஊட்டச்சத்துக்களை ஊக்குவிக்கிறது.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
👉சின்ன வெங்காயத்தில் குரோமியம் என்ற தாதுவும் உள்ளது, இது உடலின் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும்.
கல்லீரல் பாதுகாப்பு
👉சின்ன வெங்காயம் கல்லீரலை பாதுகாப்பதில் உதவுகிறது, மேலும் தாய்ப்பால் உற்பத்தியையும் அதிகரிக்கிறது.
எரிச்சல் நீக்கம்
👉சின்ன வெங்காயத்தில் உள்ள கந்தகம் (Sulfur) உடலின் எரிச்சலைக் குறைக்கும் தன்மை கொண்டது.
இயற்கை தொற்று எதிர்ப்பு
👉சின்ன வெங்காயம் சித்த மருத்துவத்தில் இயற்கை தொற்று எதிர்ப்பு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
சளி மற்றும் இருமல் நீக்கம்
👉சின்ன வெங்காயத்தை பருகுவதால் சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் குறையக்கூடியவை.
சின்ன வெங்காயத்தை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமல்ல, உடலை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
Thursday, August 22, 2024
அவன்🫅 உள்ளத்தில் அவளுக்காக👸 💞
அவளுக்காக...
🫅துணி துவைக்கவும், எனக்கான பணிவிடைகள் செய்யவும் , சமைக்கவும் , என் உடல் தேவைகளை நிறைவேற்றவும் , அவள் அவசியம் தேவை என அவளே நினைத்துக்கொண்டு இருக்கிறாள்...
🫅ஆனால் அவளிடம் என் முக்கிய தேவைகள் அது எதுவுமே அல்ல... மேல் கூறப்பட்டவற்றில் தான், அவள் கர்வம் கொண்டு ,"நான் தான் இத்தனையும் செய்து, உன்னை பார்த்துக்கொள்கிறேன் " என அவளே அவளை நினைத்து பூரிப்பும் கொள்வாள்...சில சமயம் எதிர்மறையான எண்ணங்களில் சிக்கி , "நான் இதற்கு தானே இருக்கிறேன்" என வெறுப்பையும் உமிழ்வாள்...!!
🫅அவள் பிறந்த வீட்டிற்கு சென்று மாதக்கணக்கில் ஆனால் கூட , எனக்கான தேவைகளை நானே பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு இறைவன் அழகான சூழலையும் , மனதையும் , உடலையும் கொடுத்துள்ளான்... இதில் அவள் இல்லாமல் நான் வாழ முடியவில்லை , சாப்பிட முடியவில்லை , என் உலகம் இயங்கவில்லை என மற்றவர்கள் போல் , வேதனை பட்டு புலம்பும் வாய்ப்பு எனக்கு கிடைப்பதில்லை .. அதனாலோ என்னவோ நான் அவள் இல்லாமல் மகிழ்ச்சியாக நாட்களை கழிப்பதாக எண்ணம்... இன்னும் சொல்லப்போனால் அவள் இல்லையென்றாலும் நான் மகிழ்வாக தான் இருப்பேனாம்... இன்னும் எனக்கு அவள் தேவை இல்லையாம்.. அதனால் தான், நான் வருத்தமில்லாமல் இருக்கிறேனாம்...!! ஆதலால் அவரே அவரை நொந்து கொள்ளுதல் ஒவ்வொரு முறையும் நடக்கத்தான் செய்கிறது...!!
🫅சில விடயங்களை தெளிவு படுத்த விரும்புகிறேன்...
🫅மனிதர்களை சார்ந்து வாழ்தலில் நமக்கான சில தேவைகளும் , மகிழ்வும் , அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் நமக்கான இன்பமும் கொட்டி கிடக்கிறது.... அதற்காக சார்ந்தே ஒருவர் வாழ வேண்டும் என்று நிர்பந்தம் இல்லை... ஒருவர் இல்லாமல் தன் தேவையை தானே நிறைவேற்றிக்கொள்ளுதல், ஒரு வரம்...! அவர்கள் இருக்கும் போது உதவிகரமாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களின் உலகத்தை பிடுங்கி நம் பிடியில் வைத்திருப்பதும் தவறு...
🫅என் மனைவி எங்கெல்லாம் செல்ல விரும்புகிறாரோ அவற்றிற்கு , அவரின் ஆர்வத்தை , தேவையை , உணர்வை புரிந்து , தாராளமாக என கதவை திறந்தே வைத்திருப்பது எனது இந்த நிமிடம் வரை உள்ள உணர்வு... ஆனால் இதற்கும் உங்களுக்கு பாசம் இல்லை , அதனால் தான் இப்படி உடனே சரி என ஒப்புதல் அளிக்கிறீர்கள் என மீண்டும் சிறுபிள்ளைத்தனமான கோபம்...
🫅நான் வரமாட்டேன்... எங்கள் ஊருக்கே போறேன், என் அருமை உங்களுக்கு புரிய வேண்டும் , அன்பு புரிய வேண்டும் என அவர்களே என் அன்பை எடைபோட ஏதேதோ சொல்வார்கள் செய்வார்கள்... அதற்கும் அனுமதிப்பதுண்டு... அதிலும் அவர்கள் திருப்திபடும் படி , நான் கவலையில் தோய்ந்து வாழ்வை வாழ இயலாத நிலைக்கு சென்றதில்லை...
🫅சராசரி வட்டத்திற்குள் என் அன்பை எடை போட்டு பார்த்தல் என்பது அவளுக்கு எட்டாகனி... அவள் நினைக்கும் வட்டத்திற்குள் என் அன்பு அடங்க மறுக்கிறது...ஆதலால் அன்பே இல்லை என ஒரு நேரம் வெம்புவாள்... சில நேரங்களில் நல்ல உணர்வுகளை ஏற்கும் போது பிரமிப்பாள்....
🫅இவை அத்தனையும் அவள் எண்ணத்தை பொறுத்தே மாற்றமடைந்து கொண்டே இருக்கும்... நான் அசராமல் அவற்றை பெரும்பாலும் ரசித்துக் கொண்டு இருப்பேன்... சில நேரம் வலிக்கும் ...சில நேரம் என் அன்பை சோதித்து கொண்டே இருக்கிறாளே என பாவப்பட தோன்றும்... சில சமயம் மிக அதிகமாக எதிர்மறை எண்ணத்தில் சிக்கிக்கொண்டால், அவளை தெளிவு படுத்தும் நேரத்தில் என் மனமும் புண்படும்... ஆனாலும் இவை அத்தனையும் அழகான நிகழ்வாக தான் எனக்குள் இருக்குமே தவிர , என்னை பலவீனபடுத்துவது குறைவு....
பெரும்பாலும் மனிதர்கள் பலவீனத்தில் தான் அன்பை உணர்கிறார்கள்.. அழுகையில் , பொறாமையில் , சந்தேகத்தில் , பிடிவாதத்தில் , கட்டுப்பாட்டில் ,செல்ல தொந்தரவுகளில் ... அப்படியே எதிர்மாறாக சுதந்திரம் , விட்டுக்கொடுத்தல் , பொறுத்திருத்தல், நம்பிக்கையில் , என மனம் விசாலமடைந்து இருத்தல் வெகு சிலருக்கு தான்...
🫅அதற்காக அவள் இல்லாவிட்டாள் நான் அழுதே தீர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை .... அவள் அவளாக இருப்பதில் எனக்கு பேரின்பம் தான்... அதே போல என் மனம் சூழலை ஏற்று பக்குவப்படுவதிலும் எந்த தவறும் இல்லை என நினைக்கிறேன்...
🫅அதே போல் தான் அவரின் தனிப்பட்ட முடிவுகளில் நான் , என் விருப்பத்தை திணிக்க விரும்புவதில்லை...இன்னும் சொல்லப்போனால் யாரேனும் கேட்டால் என் பெயரை பயன்படுத்திக்கொள் என்று கூறுவதும் உண்டு...
🫅இணைந்து பயணிப்பதில் சுகம் தான்...தனிமை வந்தால் ஏற்கும் வல்லமையும் வேண்டுமல்லவோ....
🫅நீ இல்லாமல் என்னால் வாழ இயலாது என்ற பலவீனத்தை அடியோடு வெறுப்பவன் நான்... யார் இல்லாவிட்டாலும் உலகம் இயங்கியே தீரும்...!!
Wednesday, August 21, 2024
90கிட்ஸ் மனம் தொட்ட love💖💖 song
Music: Ilaiyaraaja
Year: 1993
Lyrics: Vairamuthu
Singers: S.P.Balasubrahmanyam, S. Janaki
ஆண் : தாஜ்மகால் தேவையில்லை,
அன்னமே, அன்னமே..
பெண் : காடுமலை நதிகளெல்லாம்
காதலின் சின்னமே..
ஆண் : இந்த பந்தம், இன்று வந்ததோ
பெண் : ஏழுஜென்மம், கண்டுவந்ததோ
ஆண் : உலகம் முடிந்தும்,
தொடரும் உறவிதுவோ...
பெண் : தாஜ்மகால் தேவையில்லை,
ஆண் : அன்னமே,அன்னமே..
காடுமலை நதிகளெல்லாம்
பெண் : காதலின் சின்னமே..
ஆண் : பூலோகம் என்பது,
பொடியாகிப் போகலாம்,,
பொன்னாரமே, நம் காதலோ,
பூலோகம் தாண்டி வாழலாம்.
பெண் : ஆகாயம் என்பது,
இல்லாமல் போகலாம்,,
ஆனாலுமே, நம் நேசமே,
ஆகாயம் தாண்டி வாழலாம்..
ஆண் : கண்ணீரில் ஈரமாகிக்
கறையாச்சுக் காதல்
பெண் : கறை மாற்றி நாமும்
மெல்ல, கரையேற வேண்டுமே
ஆண் : நாளை வரும், காலம்
நம்மை, கொண்டாடுமே...
பெண் : தாஜ்மகால் தேவையில்லை,
ஆண் : அன்னமே,அன்னமே..
காடுமலை நதிகளெல்லாம்
பெண் : காதலின் சின்னமே..
பெண் : சில்வண்டு என்பது,
சிலமாதம் வாழ்வது,,
சில்வண்டுகள், காதல் கொண்டால்,
செடி என்ன கேள்வி கேட்குமா
ஆண் : வண்டாடும் காதலைக்
கொண்டாடும் கூட்டமே,,
ஆணும் பெண்ணும், காதல்
கொண்டால், அது ரொம்ப பாவமென்பதா
பெண் : வாழாத காதல்
ஜோடி, இம்மண்ணில் கோடியே
ஆண் : வாழாத பேர்க்கும்
சேர்த்து, வாழ்வோமே தோழியே
பெண் : வானும் மண்ணும், பாடல்
சொல்லும், நம்பேரிலே...
ஆண் : தாஜ்மகால் தேவையில்லை,
அன்னமே, அன்னமே..
பெண் : காடுமலை நதிகளெல்லாம்
காதலின் சின்ன..மே..
ஆண் : இந்த பந்தம், இன்று வந்ததோ
பெண் : ஏழுஜென்மம், கண்டுவந்ததோ
ஆண் : உலகம் முடிந்தும்,
தொடரும் உறவிதுவோ...
பெண் : தாஜ்மகால் தேவையில்லை
ஆண் : அன்னமே,அன்னமே..
காடுமலை நதிகளெல்லாம்
பெண் : காதலின் சின்னமே..
Jollyyo jimikki jimkana
💛Jollyo jimkana jimmikki💛
ஜிமிக்கியின் செல்வாக்கு பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவை பெண்களின் காதுக்கு அப்பால் ரவிக்கையில் சேலையிலும் ஆட்சி செய்வதை நாம் காணலாம்.
Tuesday, August 20, 2024
கன்னியாகுமாரி சிறப்புகள்
கன்னியாகுமரி மாவட்டம், தமிழ் நாட்டின் மாவட்டங்களில் ஒன்று ஆகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இது தமிழகத்தின் மூன்றாவது வளர்ச்சியடைந்த மாவட்டமாகும்.
பெயர் வரலாறு:
சிவபெருமானை அடைவதற்காக கன்னியாக பார்வதி நின்ற முனையின் காரணமாக ‘கன்னியாகுமரி’ என்று அழைக்கப்பட்டது. குமரி கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தன் நாயகனுக்காக காத்திருந்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து.
புவியியல்
இம்மாவட்டம் பொதுவாக மலை சார்ந்த பகுதிகளாகவும், கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் சமபூமியாகவும் காட்சியளிக்கிறது. நிலப்பரப்பின் உயரம் கடற்கரையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளை நோக்கி மெதுவாக உயர்கிறது. இம்மாவட்டதிற்கு 62 கி.மீ மேற்குக் கடற்கரையும், 6 கி.மீ கிழக்கு கடற்கரையும் உள்ளன. இம்மாவட்டத்தின் நிலப்பகுதியில் 48.9மூ விவசாய நிலமாகவும், 32.5மூ அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் இருக்கிறது.
கன்னியாகுமாரி, தமிழ்நாட்டின் தென்மேற்குப் பகுதியின் இறுதிப் பகுதியாக உள்ளது. இது பசுமை நிறைந்த மலைகளால் சூழப்பட்டு, மூன்று கடல்களும் சந்திக்கும் தனிப்பட்ட இடமாக மாறியுள்ளது. கன்னியாகுமாரியின் வரலாறு, இது பண்டைய காலம் முதல் சமீப காலம் வரை பல்வேறு கலாச்சார, மத, மற்றும் அரசியல் தாக்கங்களை சந்தித்து வந்துள்ளதைக் காட்டுகிறது.
பண்டைய காலம்:
கன்னியாகுமாரியின் வரலாறு தமிழ்நாட்டின் பண்டைய காலம் வரை செல்கிறது. இது சோழர்கள், பாண்டியர்கள், மற்றும் சேரர் பேரரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. சங்ககாலத்தில் (கி.மு. 3ம் நூற்றாண்டு - கி.பி. 3ம் நூற்றாண்டு) கன்னியாகுமாரி ஒரு முக்கியமான கடல் வர்த்தக மையமாக இருந்தது. இதன் காரணமாக பல்வேறு வெளிநாட்டு வர்த்தகர்கள், குறிப்பாக கிரேக்க, ரோமா, மற்றும் சீனர்கள் இங்கு வருகை தந்தனர்.
மத பண்பாடு:
கன்னியாகுமாரி மிகவும் பிரபலமான ஒரு புனித தலமாகும். இது தேவிபாகவதியுடன் தொடர்புடைய கன்னியாகுமாரி அம்மன் கோவில் மூலம் மிகவும் பிரபலமாகும். இது ஹிந்து மதத்தில் முக்கியமான புனிதத் தலமாகவும், தமிழக மற்றும் கேரள பக்தர்களால் பரவலாக வணங்கப்படுகிறது.
கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம்:
பெருமாள் மன்னர்கள் காலத்தில் கிறிஸ்துவம் கன்னியாகுமாரியில் பரவலாகியிருந்தது. சாந்தோமியன் கிறிஸ்தவர்கள், மலபார் கிறிஸ்தவர்கள் மற்றும் பிற கிறிஸ்தவ மரபுகள் இங்கு பரவியுள்ளன. இஸ்லாம் 7-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கன்னியாகுமாரிக்கு வந்தது, ஆபிரிக்க மற்றும் அரேபிய வர்த்தகர்களின் மூலம்.
நவீன வரலாறு:
பிரிட்டிஷ் காலத்தில், கன்னியாகுமாரி திருவிதாங்கூர் அரசின் கீழ் இருந்தது. 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், திருவிதாங்கூர் கோச்சின் ஒன்றியத்திலிருந்து கன்னியாகுமாரி 1956ல் மாநில மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது.
சுற்றுலா மற்றும் முக்கிய தனிச்சிறப்புகள்:
கன்னியாகுமாரி, அதன் இயற்கை அழகு, பவளக்கரைகள், மற்றும் சூரிய உதய, அஸ்தமனக் காட்சிகளுக்காக பிரபலமாக உள்ளது. கன்னியாகுமாரியில் உள்ள விவேகானந்த ராய்ட்டு, குமாரி அம்மன் கோவில், திருவள்ளுவர் சிலை போன்றவை முக்கியமான சுற்றுலா இடங்கள் ஆகும். இந்த வரலாற்று பின்னணியால், கன்னியாகுமாரி தமிழ்நாட்டின் பல்வேறு பரிமாணங்களை பிரதிபலிக்கின்றது.
இன்னும் பல சிறப்புகளை கொண்டது கன்னியாகுமாரி ✨✨✨
பூக்காத செடியிலும் கொத்து கொத்தாக ரோஜா பூக்க வேண்டுமா?’ - இதை முயற்சி பண்ணுங்க!
ரோஸ் செடி வளர்ப்பு முறை
ரோஸ் செடி (Rose plant) வளர்ப்பது மிக எளிமையானது, ஆனால் சில முக்கியமான பராமரிப்பு முறைகளை பின்பற்றினால் செடி ஆரோக்கியமாக வளரவும், மலர்ச்சி நிறைந்திருக்கும். இதற்கான பராமரிப்பு முறைகள்:
நடவு முறை
👉ரோஸ் செடியை நல்ல நிழல் கிடைக்காத இடத்தில் நட வேண்டும்.
👉நன்கு வடிகாலமைப்புள்ள மண்ணில் நடுவது சிறந்தது.
நீர்ப்பாசனம்
👉ரோஸ் செடியை வாரத்திற்கு இரண்டு முறை மிதமான அளவுக்கு நீர் பாய்ச்சி, மண் ஈரமாக இருக்க செய்ய வேண்டும்.
👉கோடை காலங்களில் அதிகமாக நீர் பாய்ச்ச வேண்டும்.
உடன் வழங்கும் உரம்
👉ரோஸ் செடிகளுக்கு மாதம் ஒரு முறை நாற்று உரம் அல்லது மண்ணை சீராகப்பார்க்க உரம் சேர்க்கவும்.
pruning பிளாண்ட்ஸ்
👉பழைய இலைகளை மற்றும் உலர்ந்த கிளைகளை வெட்டி ஒழிக்கவும்.
👉செடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க, புதிதாக வரும் கிளைகளை 1/3 அளவுக்கு வெட்டவும்.
கீறுகள் மற்றும் பூச்சி விரட்டல்
👉அடிக்கடி செடியின் இலைகள் மற்றும் கிளைகளில் பூச்சிகள் இருக்கிறதா என பார்க்கவும்.
👉இயற்கை பூச்சி விரட்டிகள் அல்லது வேளாண்மை பொருட்களை பயன்படுத்தி பூச்சிகளை நீக்கலாம்.
வளர்ச்சி மற்றும் பராமரிப்பு
👉சில மாதங்களுக்கு ஒரு முறை செடிக்கு மண்ணை மாற்றி, காற்றுப்புகும் விதமாக பராமரிக்கவும்.
👉தேவையான பட்சத்தில் செடியை பசும் உரம் கொண்டு சுத்தம் செய்யவும்.
இந்த பராமரிப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம், ரோஸ் செடிகள் ஆரோக்கியமாக வளரும் மற்றும் மலர்களை தொடர்ந்து தரும்.
Manage Blood Sugar, Get Glowing Skin: Ten Health Benefits of Figs🤷
Figs, also known as Anjeer in many parts of the world, are sweet, soft, and chewy fruits packed with countless health benefits. Whether you...

-
தித்திக்கும்கடலைமிட்டாய்🤗 ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தயாரிக்கப்படும் கடல...
-
சிவபுராணம் என்பது திருவாசகத்தின் முதற்பாடல்களில் ஒன்றாகவும், மானிக்கவாசகரால் பாடப்பட்ட மகத்துவமான பாடலாகவும் விளங்குகிறது. இது சிவபெருமானின...